எண்ணாயிரம் மலை
கல்வெட்டுகள் தொடர்பான எனது தேடலில் விழுப்புரம் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சமணத் தடயங்கள் அதிகளவில் இருந்தாலும் அவற்றுள் மிகவும் சிறப்பு வாய்ந்த எண்ணாயிரம் மலையே இன்றைய (22/05/2026) பயணம். செஞ்சி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டம்பட்டினை அடுத்து இடதுபுறமாக 6 கி.மீ சென்றால் இம்மலையினைக் காணலாம். குன்னத்தூர் மற்றும் எண்ணாயிரம் எனும் ஊர்களுக்கு இடையில் அமைந்துள்ளது இந்த எண்ணாயிரம் மலை. உள்ளூர் மக்கள் இதனை மேல்கூடலூர் மலை, ஐவர் மலை, பஞ்சபாண்டவர் மலை, திருநந்தகிரி மலை என பல பெயர்களில் அழைக்கிறார்கள். கத்தரி வெயில் காரணமாக இன்று காலை 9 மணியளவிலேயே பயணத்தை தொடங்க இதமான காலை வெயில் மூர்க்கமாகும் முன்னமே அடையவேண்டிய தடத்தினை அடைந்துவிட்டேன். எவ்வித மெனக்கெடலும் இன்றி தூரத்தில் இருந்து பார்க்கும்போதே மலையில் படிக்கட்டுகள் வண்ணம் தீட்டப்பட்டு இதுதான் நீ வர வேண்டிய வழி வேறெங்கும் தேடி அலைய வேண்டாம். என வழிகாட்ட வாகனத்தை ஒரு வேப்பமர நிழலில் இளைப்பாறவிட்டு 300 மீட்டர்...